கொலை அச்சுறுத்தல்
கொலை அச்சுறுத்தல்
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளரான இஸ்மாங்கண்டு மொஹம்மட் றியாஸ் என்பவரை தேடி கடந்த 19/5/2013 இரவு ஆயுதத்துடன்இனந்தெரியாத நபர்கள் அவரது உறவினரின் வீட்டுக்கு சென்று அவர்களை அச்சுறுத்தி அவர் பற்றிய தகவலை தறும் படியும் அவரை கொலை செய்யாமல் விடமாட்டோம் என்று கூறி விட்டு சென்றுள்ளனர் இது சம்மந்தமாக அக்கறைப்பற்று பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது
இத்துடன் பொலிஸில் முறைப்பாடு செய்யபட்ட ஆவணத்தையும் இணைக்கின்றேன்

நாம்தமிழர் கனடா அமைப்பினர் நடாத்திய மே18 தமிழினப்படுகொலை வாகன ஊர்தி ஊர்வலம் பல்லாயிரக்கணக்கான பல்லின மக்களின் கவனத்தை ஈர்த்தது.
மே 18 தமிழினப்படுகொலை நாளையிட்டு நாம்தமிழர் கனடா அமைப்பினரால் கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்று ஸ்காபரோ நகரில்சனிக்கிழமை மாலை 3:00 மணியளவில் மக்கோவன் பிஞ் சந்திப்பிலிருந்து ஆரம்பித்து நடாத்தப்பட்டது. இவ்வூர்வலத்தில் பல நூற்றுக்கணக்கான இனவுணர்வுள்ள தமிழ் மக்கள் பல தடைகளையும் தாண்டி கலந்துகொண்டு தங்களின் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.கலந்துகொண்ட மக்கள் அனைவரும் தங்களின் வாயைக் கறுப்புத் துணியினால்கட்டி தங்களின் சோகத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
மாகாணசபை பிரச்சினை! சா்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகிறார் அருண் தம்பிமுத்து!
மாகாணசபை பிரச்சினை! சா்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகிறார் அருண் தம்பிமுத்து!
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண சபை தவறிவிட்டது என்றும், மாகாண சபைகள் பற்றி மக்களின் கருத்தை அறிவதற்கே சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டும் என்றும் தான் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள தமிழ் மக்களில் ஒரு சிறுபகுதியினர் அதாவது 21 சதவீதமானவர்கள் மட்டுமே இருக்கின்ற யாழ்ப்பாணத்தின் மீது கவனம் செலுத்தப்படுகின்றது.
இதனால் நாட்டில் இதர பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகள் அலட்சியம் செய்யப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இலங்கை சனத்தொகையில்
கிழக்கு முதலமைச்சா் தடை விதித்திருந்த போதிலும் நீதியமைச்சர் நூலகத்தை திறந்து வைத்தார்!
கிழக்கு முதலமைச்சா் தடை விதித்திருந்த போதிலும் நீதியமைச்சர் நூலகத்தை திறந்து வைத்தார்!
![]()
கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலக திறப்பு நிகழ்வுக்கு கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தடை உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அதனையும் மீறி நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அந்நூலகத்தை திறந்து வைத்துள்ளார்.
குறித்த நூலகத்திற்கு கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டு ‘மர்ஹும் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை’ எனும் பெயரில் அந் நூலகம் திறக்கப்படுவதை
சுகாதாரத் துறையில் இந்தியா – சீனா இணைந்து செயல்பட முடிவு
லண்டனில் படுகொலை செய்யப்பட்டவரின் விபரம் அறிவிப்பு
லண்டனில் இருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர் பிரிட்டிஷ் படையின் ஃபுசிலியர்ஸ் றோயல் றெஜிமெண்டின் இரண்டாவது பட்டாலியனைச் சேர்ந்த லீ ரிக்பி என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
22 வயதான இவர் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியுள்ளார்.
பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த இவர் மிகக் கொடூரமான முறையில் நேற்று மாலை கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.… (CONTINUE READING மேலும் வாசிக்க )
Share on Facebookகனடா ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்றலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை நினைவு நாள் – மே 18, 2013


இந்திய பாகிஸ்தானிய உள்ளங்களை இணைக்கும் கொக்கோ கோலா மேஜிக் வீடியோ

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வாழும் மக்கள் தங்களை இணைக்கும் விடயங்கள் தமக்குள் பிரிவினை ஏற்படுத்தும் காரணிகளை விட அதிகம் என உணர்வதற்கும் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கும் என்ற பரப்புரையோடு,
கொக்கோ கோலா நிறுவனம் புதியதோர் முயற்சியினைத் தொடங்கியுள்ளது. இவ்விரு நாடுகளும் முன்னர் இணைந்திருந்த போது மக்கள் எப்படி அன்பைப் பகிர்ந்து கொண்டார்களோ அதற்கு இணையாக இவர்களுக்கு இடையே உள்ள தடைகளை இனி அகற்றுவதற்கு ஓர் புதிய வழியை இந்நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.
கொக்கோ கோலாவைப் பெறும் வசதியுடனும் டச் ஸ்கிரீன் தொழிநுட்பத்துடனும் பாகிஸ்தானின் லாஹூரிலும் … (CONTINUE READING மேலும் வாசிக்க )
நெடுங்கேணி சிறுமி பாலியல் வன்புணர்வு! சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜராகவில்லை!
நெடுங்கேணி சிறுமி பாலியல் வன்புணர்வு! சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜராகவில்லை!
நெடுங்கேணி இராணுவ முகாமைச் சேர்ந்த ஒருவரையே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்ததோடு சந்தேகநபரை இன்று காலை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் மதியம் வரை சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபடவில்லை என்று அங்கு சென்ற செய்தியாளர் கூறுகின்றார்.
இதேவேளை, இராணுவ பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற நெடுங்கேணி சேனப்பலவு பகுதிக்கு சென்றிருந்ததுடன் அப்பகுதியில் விசாரணைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன், சந்தேகநபர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டு வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
![]()
தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் உதவியோடு தீர்க்க இலங்கை அரசு முன்வரவேண்டும்! இரா.துரைரெட்ணம்
தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் உதவியோடு தீர்க்க இலங்கை அரசு முன்வரவேண்டும்! இரா.துரைரெட்ணம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:39.49 PM GMT ]
![]()
இலங்கை அரசு தம் தவறை மூடி மறைக்க எத்தனிக்காமல் தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் உதவியோடு தீர்க்க முன்வரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற
தலை மன்னாரில் வைத்தியர்கள் இல்லாமல் அல்லல் படும் நோயாளிகள்
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறையினால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒரேயொரு வைத்தியர் மட்டுமே கடமையாற்றி வருகின்றார். கடந்த ஒரு வாரகாலமாக அந்த வைத்தியரும் விடுமுறையில் சென்றுள்ளார்.
அவருக்கு பதிலாக பேசாலை வைத்திய அதிகாரி பதில் கடமையில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவர் சில நேரங்களில் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி கடமைக்கு சமூகம் தராது இருப்பார். இதனால் காலையிலிருந்து மாலைவரை வைத்தியரின் வருகைக்காக காத்திருக்கும் நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல வேண்டிய நிலை … (CONTINUE READING மேலும் வாசிக்க )
Share on Facebook












தமிழகத் திரைப்படத்துறை (செய்திகள்)
